மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாக்கவேண்டும்,புதிய பேருந்து நிலையம் அமைக்கவேண்டும்,புறவழிச்சாலை அமைக்கும் பணியை உடனடியாகத் துவங்கவேண்டும்,பெரியார் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவேண்டும் என்பன பல்வேறு உள்ளிட்ட மயிலாடுதுறை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறவேற்றவேண்டும் என்பன வலியுறுத்தி,தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்எல்ஏ ஆர்.அருள்செல்வன் ஜனவரி 20-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவிப்பு செய்து பல்வேறு அரசியல் கட்சியினர்கள்,பொதுமக்கள்,வணிகர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் ஆதரவுத் திரட்டி வருகின்றார்.