இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் நெசவாளர்கள் திடீர் சாலை மறியல்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் செவ்வாய்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சற்று நேரம் ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில்

News image
Updated On :20 ஜனவரி 2015, 2:00 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் செவ்வாய்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சற்று நேரம் ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 8 கூட்டுறவு நெசவாளர்கள் சங்கம் உள்ளன. இவர்களின் நெசவுக்கு கடந்த இரு மாதங்களாக நூல் வழங்கப்படவில்லையாம். மேலும் நெய்த துணிகளை அரசு கொள்முதல் செய்யாததால் பல லட்சக்கணக்காண ரூபாய் மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளதாம். இது குறித்து அலுவர்களிடம் பல முறையிட்டும் அரசுக்கு கோரிக்கை தெரிவிக்கப்படவில்லை என்று கூறி, செவ்வாய்கிழமை ஆர்.சி. தேவாலயத்திற்கு எதிரேயுள்ள 1601 ஸ்ரீவில்லிபுத்தூர் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகியும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வராததால், அதிருப்தியடைந்த நெசவாளர்கள் நகர் காவல் நிலையம் அருகே நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் பற்றி அறிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் கே.முரளிதரன், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதனையடுத்து சங்க அலுவலகத்திற்கு உதவி இயக்குநர் பாண்டி வந்து பேசினார். அடுத்த வாரத்திற்குள் நெசவுக்கு நூல் தர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். தேங்கியுள்ள துணிகளை கொள்முதல் செய்வது என்பது அரசு செய்ய வேண்டியது என்று விளக்கினார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் இப் பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.