இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான அடைவுத் தேர்வு

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டரா வளமையத்திற்குட்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களின்

News image
Updated On :23 ஜனவரி 2015, 9:03 am

கோ.ஜெயக்குமார்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டரா வளமையத்திற்குட்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களின் அடைவுத் திறனைச் சோதிப்பதற்கான தேர்வு நடைபெற்றது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. இதன் பயனாக மாணவர்கள் கற்றலில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். சொல்வதை எழுதுதல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசித்தலில் மாணவர்கள் எவ்வாறு திறன் பெற்றுள்ளார்கள் என்பதை சோதிப்பதற்காக இந்த தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதம் நடைபெறும் இத் தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் மேலும் எவ்வாறு பயிற்சிகள் அளித்து அவர்களை கற்றலில் முழுமை அடையச் செய்யலாம் என்பது குறித்து மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் முயற்சிகளை மேற்கொள்ளும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட 10 தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் இம் மாதம் 20 மற்றும் 21-ம் தேதிகளில் தமிழ், கணிதம் மற்றும் ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 8-ம் வகுப்பிற்கு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் அடைவுத் தேர்வு நடைபெற்றது.

இந்த அடைவுத் தேர்வை ஸ்ரீவில்லிபுத்தூர் சரக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன், மாவட்ட மேற்பார்வையாளர் மற்றும் தலைமை ஆசிரியர் ந.ராஜசேகர் ஆகியோர் பார்வையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.