நியாயவிலைக் கடையிலேயே பொருள்களை எடையிட்டு வழங்காமல், இருப்பு குறைவிற்கு அபராதம் விதிக்கும் போக்கை கைவிட வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், நியாயவிலைக்கடை திட்டப்பணிகள் அனைத்து கணினி மயமாக்க வேண்டும், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் பொட்டலமாக வழங்க வேண்டும், தமிழகஅரசு அமைத்துள்ள ஊதியக்குழுவில் எங்கள் சங்கத்தின் கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறோம். இந்திய மாநில அரசு பணியாளர் மகாசம்மேளன பொதுச்செயலாளர் கு.பாலசுப்பிரமணியன் தலைமையில் அண்மையில் சென்னையில் கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு வழங்குவதற்காக 7 பேர் கொண்ட கமிட்டி கூடுதல் பதிவாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.