இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு பிரிவினரிடைய மோதல்: 20 பேர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு சமுதாயத்தினரிடையே அசாரணமான சூழ்நிலை நிலவுவதால், சட்டம் ஒழுங்கை பேணி அமைதியை காப்பதற்காக

News image
Updated On :31 ஜனவரி 2015, 2:08 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு சமுதாயத்தினரிடையே அசாரணமான சூழ்நிலை நிலவுவதால், சட்டம் ஒழுங்கை பேணி அமைதியை காப்பதற்காக போலீஸார் 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அத்திகுளம் வடக்குத் தெருவில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளார்கள். இவர்களுக்கான மயானம், கிழக்கு பக்கம் உள்ள கண்மாய் அருகேயுள்ளது. இந்த சமுதாயத்தினர் இறந்தால், பிரேதத்தை மற்றொரு தரப்பினர் குடியிருக்கும் காலனி பகுதி வழியே கொண்டு செல்வார்கள். இந்த நடைமுறை காலம்காலமாய் இருந்து வருகிறது. சமீப காலமாய் காலனி வழியே  மற்றொரு சமுதாயத்தினரின் பிரேதத்தைக் கொண்டு செல்லக் கூடாது என்று காலனி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக சடலங்களை கொண்டு செல்ல இயலாமல் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர்கள் பிரேதத்துடன் போராட்டங்களி்ல் ஈடுபட்டனர். அதிகாரிகள் தற்காலிகமாக சமரசம் செய்து வழக்கம்போல் காலனி வழியே சடலங்களை கொண்டு செல்ல ஏற்பாடு செய்து கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் இப் பகுதியில் அசாதரணமான சூழ்நிலை நிலவுவதாயும், சட்டம் ஒழுங்கை பேணி அமைதியைக் காப்பதற்காகவும் வடக்குத் தெருவைச் சேர்ந்த அ.கிருஷ்ணசாமி (50) மற்றும் 9 பேர் மீதும்,  கீழத் தெருவைச் சேர்ந்த செ.பெருமாள் (55) மற்றும் 9 பேர் மீதும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் கே.சுந்தரபாண்டியன் புகார் செய்தார். போலீஸார் 20 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.