பழனி அருகே போலிப்பத்திரம் மூலம் நிலமோசடி செய்ததாக வழக்குப் பதிவு

பழனியில் போலிப்பத்திரம் மூலம் நிலமோசடி செய்ததாக நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Published on
Updated on
1 min read

பழனியில் போலிப்பத்திரம் மூலம் நிலமோசடி செய்ததாக நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பழனி சிவகிரிப்பட்டி திருநகரை சேர்ந்தவர் பத்மநாபன்.  இவர் ஓம்சண்முகாதியேட்டர் இட்டேரி ரோட்டில் சுமார் மூன்று ஏக்கர் நிலத்தை மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த சித்ரா, சுமதி ஆகியோரிடம் விலைக்கு வாங்கியுள்ளார்.  அதே வேளை அதே நிலத்துக்கு போலியான பத்திரத்தை தயாரித்து முனியாண்டி மகன் விஜயன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் சித்ரா, சுமதி உதவியுடன் வேறு ஒருவருக்கு விற்க முயற்சி செய்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து மதுரை உயர் நீதிமன்றத்தில் பத்மநாபன் தொடர்ந்து வழக்கைத் தொடர்ந்து நீதிமன்ற உத்திரவின் பேரில் நிலத்துக்கு உரிமையாளர்களான நான்கு பேர் மீதும் பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com