இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்கோவில் பூக்குழி உற்சவம் தொடக்கம்

விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய திருவிழாவில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பெரிய மாரியம்மன்கோவில் பூக்குழி

News image
Updated On :9 மார்ச் 2015, 10:06 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய திருவிழாவில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பெரிய மாரியம்மன்கோவில் பூக்குழி உற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி (தீ மிதித்தல்) இம் மாதம் 20-ம் தேதி நடைபெறுகிறது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து தீ மிதிப்பார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், புறவழிச்சாலையில் அமைந்துள்ள பெரிய மாரிம்மன்கோவில் வெகு பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் அமாவாசையன்று சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து மாநிலம் முழுமையும் இருந்து வந்து தீ மிதிப்பார்கள்.

இந்த ஆண்டு பங்குனி மாத பூக்குழி உற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அனுக்ஞை பூஜை, காப்பு கட்டுதலைத் தொடர்ந்து கொடிப்பட்டம் தெருக்கள் வழியே கொண்டுவரப்பட்டு சன்னதியை அடைந்தது. அங்கு தலைமை அர்ச்சகர் ஹரிஹரன் கொடிமரத்தில் கொடியேற்றினார். விழாவில் கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

13 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் புறப்பாடு ஆகிய வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதித்தல் 12-ம் திருநாளான 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பகல் 1.35 மணிக்கு நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராமராஜா செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.