கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மார்ச் 21,22 தேதிகளில் எம்ஜிஆர் திட்டு கடற்கரையில் விடியல் விழா: ஆட்சியர் தலைமையில் முன்னேற்பாடு கூட்டம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை எம்ஜிஆர் திட்டு கடற்கரையில் மாவட்ட நிர்வாகம் மற்ரும் சுற்றுலாத்துறை சார்பில் வருகிற மார்ச் 21, 22 ஆகிய இருநாட்கள் விடியல் விழா

News image
Updated On :10 மார்ச் 2015, 2:17 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை எம்ஜிஆர் திட்டு கடற்கரையில் மாவட்ட நிர்வாகம் மற்ரும் சுற்றுலாத்துறை சார்பில் வருகிற மார்ச் 21, 22 ஆகிய இருநாட்கள் விடியல் விழா நடத்தப்படவுள்ளது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, கடலூர் கோட்டாட்சியர் ஷர்மிளா, விருத்தாசலம் கோட்டாட்சியர் உதயகுமார், சுற்றுலாத்துறை அலுவலர் க.தமிழரசி, இணை இயக்குநர் (மருத்துவம்)வித்யாசங்கம், துணை இயக்குநர் (சுகாதாரம்) ஜவகர்லால், மீன்வளத்துறை உதவிஇயக்குநர் செல்வம், சிதம்பரம் வட்டாட்சியர் சீனுவாசன், கிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர் செல்லப்பிள்ளை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

பின்னர் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் செய்தியாளர்களிடையே தெரிவித்தது:

ஆண்டு தோறும் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத்துறையும் இணைந்து விடியல் விழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மார்ச் 21,22 ஆகிய இரு தினங்கள் விழா நடைபெறவுள்ளது. மார்ச் 21-ம் தேதி காலை 9 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. பின்னர் பீச்வாலிபால், கபாடி, யோகா உள்ளிட்ட போட்டிகள் மற்றும் அலங்கார படகுகளின் அணி வகுப்பும் நடைபெறும். பாராசெய்லிங் என்ற நிகழ்ச்சி இந்தியன் ஏரோஸ்ஃபோர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில்  நடத்தப்படவுள்ளது.

சிறுகுழந்தைகளுக்கான வாட்டர் போட்டிங், ஜம்பிங் பலூன், வாட்டர் பலூன், ஜம்பிங் நெட், குழந்தைகள் பைக் மற்றும் புலி, யானை பொம்மைகள் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களும் உண்டு. மேலும் மாவட்ட ஊட்டச்சத்து துறையின் சார்பில் பாரம்பரிய உணவு வழங்கப்படும். மேலும் மகளிர் திட்டத்தின்சார்பில் கைவினை பொருள்கள் கண்காட்சி நடைபெறும். மாலை 5 மணிக்கு கடற்கரை நடைபயணம் தொடங்கி 6 மணி முடிவடையும். மாலை 6 மணி முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறையின் மூலம் பரதநாட்டியம் நிகழ்ச்சியும், புதுவாழ்வு திட்டம் மூலம் ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

தொடர்ந்து சின்னதிரை பிரபலங்களில் பல்சுவை நிகழ்ச்சி நடைபெறும். இரவு 8 மணி முதல் 9 மணி வரை கடற்கரை உணவு திருவிழா நடைபெறுகிறது. அச்சமயம் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும்.மார்ச் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு அண்ணாமலைப் பல்கலை. இசைத்துறையின் சார்பில் பூபாள ராகத்துடன் சூரிய உதயத்தை வரவேற்கும்

நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரிதிநிதிகள்  பங்கேற்கின்றனர். இதனை தொடர்ந்து யோகாசனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம் போன்ற கிராமிய வீரவிளையாட்டுகள் நடைபெறும். பின்னர் கயாக்படகு போட்டி, கனோயிங் படகு போட்டிகள் நடைபெறும். இருநாட்களிலும் அலங்கார படகு

அணிவகுப்பு, அலங்கார மீன் கண்காட்சிகள், மருத்துவமுகாம் ஆகியவை நடைபெறும். பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்புகள், போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். இவ்விழாவை முன்னிட்டு கடலூரிலிருந்து முடசல்ஓடை வழியாக பிச்சாவரம் வரை மீண்டும் பேருந்து வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.விடியல்விழா நடத்துவதை முன்னிட்டு மார்ச் 13,14 தேதிகளில் எம்ஜிஆர் திட்டு மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மைபடுத்தும் பணி நடைபெறும் என ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.