கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரம் அருகே எம்ஜிஆர் திட்டு கடற்கரையில் விடியல் விழா தொடங்கியது

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை எம்ஜிஆர் திட்டு கடற்கரையில் இருநாள் விடியல் விழா 2015 சனிக்கிழமை காலை தொடங்கியது.

News image
Updated On :21 மார்ச் 2015, 11:02 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை எம்ஜிஆர் திட்டு கடற்கரையில் இருநாள் விடியல் விழா 2015 சனிக்கிழமை காலை தொடங்கியது.

கடலூர் மாவட்டம் கிள்ளை எம்ஜிஆர் திட்டு கடற்கரையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் மார்ச் 21, 22 ஆகிய இருநாட்கள் விடியல் விழா நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு கிள்ளை எம்ஜிஆர் திட்டு கடற்கரையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு மங்கலஇசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

பீச் வாலிபால் போட்டியை சிதம்பரம் உதவிஆட்சியர் (பொறுப்பு) தினேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிள்ளை பேரூராட்சி தலைவர் செ.வித்தியாதித்தன், மாவட்ட சுற்றுலா அலுவலர் கே.தமிழரசி, பேரூராட்சி செயல்அலுவலர் செல்லப்பிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் கடற்கரையில் கபடி போட்டி, யோகா போட்டி, மாணவ, மாணவியர்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி, பாரா செயிலிங் என்ற பாராசூட்டில் பறக்கும் சாகச நிகழ்ச்சி, பரதநாட்டியம், சின்னத்திரை பிரபலங்களின் பல்சுவை நிகழ்ச்சி, வாணவேடிக்க உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இரவு 9 மணி வரை நடைபெற்றன. இந்த விடியல் விழா ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று கண்டு களித்தனர். அலங்கரிக்கப்பட்ட படகுகளின அணிவகுப்பு, கைவினப் பொருள்களின் விற்பனை, பாரம்பரிய உணவு பொருள்களின் விற்பனை, மீன் கண்காட்சிகம் ஆகியவை விடியல்விழாவில் இடம் பெற்றிருந்தன.

இரண்டாம் நாளான இன்று (மார்ச் 22-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு அண்ணாமலைப் பல்கலை. இசைத்துறையின் சார்பில் பூபாள ராகத்துடன் சூரிய உதயத்தை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரிதிநிதிகள் பங்கேற்கின்றனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தலைமையில் நடைபெறும் விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் விடியல்விழாவை தொடங்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசுகிறார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எம்.ஆர்.லிங்கம் நன்றி கூறுகிறார்.

இதனை தொடர்ந்து யோகாசனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம் போன்ற கிராமிய வீரவிளையாட்டுகள் நடைபெறுகிறது. பின்னர் கயாக்படகு போட்டி, கனோயிங் படகு போட்டிகள் உள்ளிட்ட நீர் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்புகள், போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு கடலூரிலிருந்து முடசல்ஓடை வழியாக பிச்சாவரம் வரை சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

டால்பின் மீன்களின் அணிவகுப்பு: கிள்ளை எம்ஜிஆர் திட்டு கடற்கரையில் சனிக்கிழமை காலை விடியல்விழா தொடங்கிய சிறுது நேரத்தில் கடலில் டால்பின் மீன்கள் கூட்டம், கூட்டமாக அணிவகுத்து துள்ளிக்குதித்து விளையாண்டு கடந்து சென்றதை மக்கள் கண்டு அதிசயதித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.