ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விராலிமலையில் மாரடைப்பு ஏற்பட்டு சரக்கு வேன் ஓட்டுநர் சாவு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் திங்கள்கிழமை வீட்டு உபயோக பொருட்கள் ஏற்றி வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு சரக்கு வேன் ஓட்டுநர் உயிரிழந்தார்.

News image
Updated On :5 மே 2015, 4:07 am

சி. உதயகுமார்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் திங்கள்கிழமை வீட்டு உபயோக பொருட்கள் ஏற்றி வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு சரக்கு வேன் ஓட்டுநர் உயிரிழந்தார்.

கரூரைச் சேர்ந்த சேது மகன் சரவணன்(40) சரக்கு வேன் ஓட்டுநர், இவர் கடந்த திங்கள்கிழமை(மே, 4) சிவகங்கை மாவட்டம் காரைகுடியில் இருந்து ஒரு சரக்கு வேனில் வீட்டு உபயோக பொருட்களை ஏற்றி கொண்டு விராலிமலை வழியாக கரூர் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேன் விராலிமலை அருகே உள்ள ராஜளிப்பட்டி அருகே திங்கள்கிழமை இரவு வந்த போது ஓட்டுநர் சரவணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது, வேனை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, அக்கம்பக்கத்தினரை அழைக்க முற்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தார்.

இதுகுறித்து விராலிமலை காவல் உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.