/

மாநில அளவில் 2ம் இடம் பெற்ற கள்ளக்குறிச்சி மாணவன் கலெக்டர் ஆக விருப்பம்

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூர் சத்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆ. ராகுல் 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2ம் இடம் பிடித்துள்ளார்.

News image
Updated On :21 மே 2015, 7:33 am

எஸ். முரளி

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூர் சத்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆ. ராகுல் 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2ம் இடம் பிடித்துள்ளார்.

அவர் தமிழில் 98, மதிப்பெண்களும்  மற்ற 4 பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இது குறித்து அந்த மாணவர் கூறும் போது இது தனது  கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு என்றும் தன்னை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன் என்றும் கூறினார். மேலும் கலெக்டர் ஆக வேண்டும் என்பதுதான் தனது லட்சியம் என்றும் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.