விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

 சிதம்பரம் மருந்துக்கடையில் ரூ.1லட்சம் ரொக்கம், 6 செல்போன்கள் திருட்டு

சிதம்பரம் உள்ள மருந்துக்கடை மற்றும் செல்போன் ரீசார்ஜ் கடையில் ரூ.1லட்சம் ரொக்கம் மற்றும் 6 செல்போன்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

News image
Updated On :18 மார்ச் 2016, 8:12 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் உள்ள மருந்துக்கடை மற்றும் செல்போன் ரீசார்ஜ் கடையில் ரூ.1லட்சம் ரொக்கம் மற்றும் 6 செல்போன்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் நெடுஞ்சாலையில் ஓமக்குளத்தில் தாமோதரன் (32) என்பவர் மருந்துக்கடை மற்றும் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்துள்ளார். வியாழக்கிழமை இரவு கடையை பூட்டுக்கொண்டு வீ்ட்டிற்கு சென்று, வெள்ளிக்கிழமை காலை கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளேயிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 6 செல்போன்கள் திருடு போனது கண்டு அதிர்ச்சியுற்றார்.

இதுகுறித்து தாமோதரன் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கடலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.