ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் அமர்நாத் யாத்திரீகர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 3 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள் வாகனம் நேற்று சென்று கொண்டிருந்த போது அனந்த்நாக் மாவட்டம் குவாசிகந்த் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதால் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. விடிய விடிய நடைபெற்ற இந்தச் சண்டையில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், ஒருவனை உயிருடன் பிடித்தனர். சண்டையில், பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் மூவரும் கடந்த ஜூலை மாதம் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்திய அபு மவியா, ஃபர்கான், யவார் என கண்டறியப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை டிஜிபி வைத் தெரிவித்துள்ளார்.
இவர்கள் லஷ்கர் ஈ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அதில் இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் வைத் கூறியுள்ளார்.
அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்

கோடை விடுமுறை, வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஹரியாணா எம்எல்ஏக்கள் இடைநீக்கம்! காங்கிரஸ் அதிரடி!
அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


