ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தற்காலிக பணியிடை நீக்கம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் வேணுகோபால் செவ்வாய்கிழமை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் வேணுகோபால் செவ்வாய்கிழமை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணி புரிந்தவர் வேணுகோபால். இவர் தர்மபுரியில் பணியில் இருந்தபோது இவர் மீது லஞ்ச ஊழல் வழக்கு இருந்தது.
இந்நிலையில் இந்த கிரிமினல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இவர் காவல் ஆய்வாளராக பணியில் இருக்கக் கூடாது என்று, அந்த வழக்கின் புகார்தாரர் தமிழக உள்துறைக்கு புகார் செய்திருந்தார்.
இதனையடுத்து இவரை பணியிடை நீக்கம் செய்ய உள்துறை செயலாளர் டி.ஐ.ஜி.க்கு அறிவுரை வழங்கினார். இதன் பேரில் மதுரை சரக டி.ஐ.ஜி. ஆனந்தகுமார் சோமானி, காவல் ஆய்வாளர் வேணுகோபாலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...