யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசையும், ஆளுநரையும் கண்டித்து என்.ஆர். காங் - அதிமுக வெளிநடப்பு

காங்கிரஸ் அரசைக் கண்டித்து என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், துணைநிலை ஆளுநரை கண்டித்து

News image
Updated On :30 மார்ச் 2017, 12:57 pm

தினமணி

புதுச்சேரி: காங்கிரஸ் அரசைக் கண்டித்து என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், துணைநிலை ஆளுநரை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்களும் வியாழக்கிழமை பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இரங்கல் தீர்மானம் நிறைவேறப்பட்டதும் பேரவைத் தலைவர் சட்ட முன்வரைவுகளை வாசிக்க முதல்வரை அழைத்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி பேசியதாவது:

காங்கிரஸ் அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. நீட் தகுதித் தேர்வு தொடர்பாக முறையான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அரசு சார்பு நிறுவனங்களில் பணி ஆணை பெற்றவர்களை நீக்கம் செய்தது தான் சாதனை. தேர்தல் வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை.

துணைநிலை ஆளுநருடன் மோதல் போக்கை காங்கிரஸ் அரசு கடைபிடித்து வருவதால் மாநில வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படுகிறது. சட்டப்பேரவையில் உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு தராததைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.
அதிமுகவினர் வெளிநடப்பு

பேரவை தலைவர் இருக்கையை முற்றுகையிட அதிமுக எம்.எல்.ஏக்கள் முயன்றதால் அவைக் காவலர்கள் அவர்களைத் தடுத்தனர். அவைக்காவலர்களுடன் அதிமுக உறுப்பினர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுப்ட்டனர். 
முதல்வர் நாராயணசாமி: இருக்கையில் அமர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.  கொறடா: உரிமை மீறல் பிரச்னையை பேரவைத் தலைவர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் உரிமை தொடர்பான பிரச்னை. இதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

லட்சுமி நாராயணன்: அதிமுக உறுப்பினர்கள் பிரச்னை எடுத்துக் கொள்ளப்படும்.
அன்பழகன்: துணைநிலை ஆளுநரால் எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அவர் மாநில அரசுக்கு இணையாக மற்றொரு அரசை நடத்துகிறார். நாங்கள் ஒத்தி வைப்பு தீர்மானம் தந்துள்ளோம். அதைக் எடுக்காத பேரவையைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.