யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழக விவசாயிகளுடன் ராகுல் இன்று சந்திப்பு

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி வியாழக்கிழமை (மார்ச் 30) சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.

News image
Updated On :30 மார்ச் 2017, 12:47 pm

தினமணி

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி வியாழக்கிழமை (மார்ச் 30) சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.

சென்னை சத்தியமூர்த்திபவனில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி: தில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை ராகுல்காந்தி வியாழக்கிழமை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிய உள்ளார். அவருடன் நானும் செல்கிறேன் என்றார்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: முன்னதாக சு.திருநாவுக்கரசர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: தமிழகம் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை எதிர்கொள்ள அதிமுக அரசு நரேந்திர மோடி அரசிடம் ரூ.39 ஆயிரம் கோடி வறட்சி நிவாரணம் கேட்டது.

ஆனால், மத்திய பாஜக அரசோ ரூ.1,748 கோடிதான் ஒதுக்கியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15 நாள்களாக தில்லி ஜந்தர்மந்தரில் விவசாய சங்கங்களின் தலைவர் வி. அய்யாக்கண்ணு தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஏப்ரல் 3-இல் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு தெரிவிப்பதால், இதே நாளில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடைபெற இருந்த போராட்டம் ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.