அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மீண்டும் மீண்டும் நெட்டிசன்களின் வலையில் சிக்கும் தமிழக அமைச்சர்!

நாங்கள் பொய்தான் சொன்னோம் என்றும்,  பாரத பிரதமர் மோடி என்று கூறுவதற்கு பதிலாக பாரத பிரதமர் மன்மோகன் சிங் என்று

News image
Updated On :9 நவம்பர் 2017, 7:45 am

DIN

திண்டுக்கல்:  நாங்கள் பொய்தான் சொன்னோம் என்றும்,  பாரத பிரதமர் மோடி என்று கூறுவதற்கு பதிலாக பாரத பிரதமர் மன்மோகன் சிங் என்று கூறியும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அமைச்சர் திண்டுகல் சீனிவாசன் மீண்டும் வாய் குளறி பாரத ரத்னா எம்.ஜி.ஆர் என்பதற்கு பதில் பாரத பிரதமர் என்று கூறி நெட்டிசன்களின் கேலிக்கு ஆளாகியுள்ளார். 

இன்று திண்டுக்கல்லில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, எம்எல்ஏ விபிபி பரமசிவம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ஆரம்பத்திலேயே பாரத பிரதமர் என்று ஆரம்பித்தார். 

பின்னர் சமாளித்து பாரத ரத்னா எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது என்று கூறினார். பின்னர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் அனைவருக்கும் மேற்படி எல்லாம் இருக்கு என்றும் கூறினார். மேற்படி என்று அமைச்சர் எதை கூறுகிறார் என கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.