திட்டமிட்டபடி ஜூன் 12-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு: வெள்ளை மாளிகை அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் ஜூன் 12-ம்


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் ஜூன் 12-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும், வட கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அடிக்கடி மிரட்டி வந்தார். சீனா - தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் உன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார்.
ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சந்திப்பு சம்பந்தமான முன்னேற்பாடுகள் தொடர்பாக பேசுவதற்காக வடகொரிய அதிபரின் உதவியாளர் கிம் யாங் சோல் நேற்று அமெரிக்கா சென்றார். டிரம்பை சந்தித்த அவர், கிம் ஜாங் உன் சார்பில் ஒரு கடிதத்தையும் அவரிடம் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடிகளினால், இந்த சந்திப்பு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில், வட கொரிய அதிபருடனான சந்திப்பு குறித்த தகவல்களை அதிபர் டிரம்ப் ஒவ்வொரு நாளும் தேசிய பாதுகாப்பு குழுவினரிடம் இருந்து பெற்று வருகிறார். ஜூன் 12-ம் தேதி இருநாட்டு அதிபர்களும் சிங்கப்பூரில் காலை 9:00 மணிக்கு சந்திக்க உள்ளனர் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...