

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று தனது 65வது பிறந்தநாள் முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் துவி மரியாதை செலுத்தினார்.
பிறகு, கோபாலபுரம் இல்லம் வரும் மு.க.ஸ்டாலின், தி.மு.க. தலைவர் கருணாநிதியிடமும், தாயார் தயாளு அம்மாளிடமும் ஆசி பெறுகிறார். அங்கிருந்து, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்தித்து அவர் வாழ்த்து பெறுகிறார்.
தொண்டர்கள் தனக்கு சால்வை அணிவிக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக புத்தகங்கள் அளித்தால் நல்லது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். எனவே, அவரின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து, தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் அவருக்கு புத்தகங்களை பரிசாக அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.