45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அருப்புக்கோட்டை: மின் கம்பிகளை உரசும் மரக்கிளைகளால் விபத்து அபாயம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மலையரசன் கோவில் சாலையில் மின் கம்பிளை உரசும் மரக்கிளைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் அம்மரக்கிளைகளை அகற்றக் கோரிக்கை எழுந்துள்ளது.

News image
அருப்புக்கோட்டை மலையரசன் கோவில் சாலையில் மின்கம்பிகளை உரசும் மரக்கிளைகள்.
Updated On :1 ஆகஸ்ட் 2020, 12:01 pm

DIN

அருப்புக்கோட்டை, ஆக.1: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மலையரசன் கோவில் சாலையில் மின் கம்பிளை உரசும் மரக்கிளைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் அம்மரக்கிளைகளை அகற்றக் கோரிக்கை எழுந்துள்ளது.

அருப்புக்கோட்டை தெற்குத்தெருவிலிருந்து மலையரசன் கோவில் செல்லும் சாலையில் தனியார் மர அறுவை ஆலை ஒன்று உள்ளது. இதனருகே சாலையோரம் உள்ள இரட்டை மின் கம்பங்களிலிருந்து அடுத்துள்ள மின் கம்பத்திற்குச் செல்லும் மின் கம்பிகளை அச்சாலையோரம் உள்ள மரத்தின் கிளைகள் உரசிய வண்ணம் உள்ளன.

இதனால் மழை அல்லது காற்று வீச்சுக்குக் கிளைகள் அசையும் போது மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இப்பகுதியினரும் மழைக்காலங்களில் இந்த மின்கம்பங்கள் உள்ள இடத்தை அச்சத்துடனே கடந்து செல்ல நேர்கிறது.

இந்நிலையில் பொதுமக்கள் இம்மரக்கிளைகளைத் தாமே அகற்ற முற்பட்டால் மின்சாரம் பாய்ந்து விபத்து நேருமோ என அச்சம் கொள்கின்றனர். இதனால் மின்வாரிய ஊழியர்கள் உரிய முறையான நடவடிக்கை மூலம் இம்மரக்கிளைகளை அகற்றக் கோரி இப்பகுதிவாசிகள் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லையெனப் புகார் எழுந்துள்ளது.

எனவே விபத்து நேரும் முன்பாக மின்கம்பிகளை உரசும் மரக்கிளைகளை அகற்ற வேண்டுமென இப்பகுதிவாசிகள் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.