45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 3 பாம்புகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்த இரண்டு சாரைப் பாம்புகள் மற்றும் ஒரு நல்ல பாம்பை தீயணைப்புத்துறையினர் போராடி பிடித்தனர்.

News image
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்புகள்
Updated On :4 ஆகஸ்ட் 2020, 12:18 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்த இரண்டு சாரைப் பாம்புகள் மற்றும் ஒரு நல்ல பாம்பை தீயணைப்புத்துறையினர் போராடி பிடித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது படிக்காசு வைத்தான் பட்டி அந்த பகுதியை சேர்ந்தவர் மாரிச்சாமி இவருக்கு சொந்தமான தகரக் கொட்டகை வீடு உள்ளது.

இந்த வீட்டில் மேலே போடப்பட்டுள்ள பைப்புகளில் இரண்டு சாரைப் பாம்புகள் புகுந்து கொண்டன. வீட்டின் மேற்கூரை தகரக் கொட்டகையில் சாரைப் பாம்புகள் இரண்டு இருப்பதைப் பார்த்த மாரிச்சாமி அதிர்ச்சி அடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறை அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று செவ்வாய்கிழமை  தகர கொட்டகையில் இரும்பு பைப்புகளில் பதுங்கியிருந்த இரண்டு சாரைப் பாம்புகளை போராடி பிடித்தனர்.

அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வைத்தியலிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ் இவருக்கு சொந்தமான தோட்டத்தில் நல்ல பாம்பு ஒன்று இருந்தது. இந்தப் பாம்பு தோட்டத்தில் இருந்து ஒரு வீட்டுக்குள் நுழைய முயன்றது அந்த பாம்பையும் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர் பிடித்தனர். மொத்தம் மூன்று பாம்புகளையும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு அருகே உள்ள ஆள் நடமாட்டமில்லாத கண்மாய் பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி குருசாமி கூறும்போது, 

இரண்டு சாரைப் பாம்பும் சுமார் 8 அடி நீளமும், நல்ல பாம்பு சுமார் 6 அடி நீளம் இருந்தது. அனைத்தை பாம்புகளையும் உயிருடன் கண்மாய் பகுதியில் விட்டு விட்டோம் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.