இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்தது கன மழை: அவலாஞ்சியில் 581 மி.மீ மழை 

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்தது கன மழை அவலாஞ்சி பகுதியில் 581 மி மீ மழை பதிவாகியுள்ளது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2020, 6:12 am

DIN


நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்தது கன மழை அவலாஞ்சி பகுதியில் 581 மி மீ மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. புதன்கிழமை பலத்த காற்று வீசியதால் 20க்கும் மேற்பட்ட மரங்கள் சாலை, வீடுகளின் மீது விழுந்தன. எடக்காடு பகுதியில் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஒரு போலீஸ், இரு தீயணைப்புத் துறையினருக்கு காயம் ஏற்பட்டது.

அரக்கோணத்தில் இருந்து வந்த  தேசிய மீட்புப் படையினா் குந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.  அதேபோல, நக்ஸல் தடுப்புப் பிரிவினரும்  களத்தில் இறங்கியுள்ளனா். 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 581 மி.மீ. பதிவாகியுள்ளது. அதேபோல் கூடலூர் 335 மி.மீ, அப்பர் பவானியில் 319 மி.மீ, மேல் கூடலூர் 305 மி.மீ, நடுவட்டம் 226 மி.மீ, கிளன்மார்கன் 212 மி.மீ, தேவாலா 220 மி.மீ, எமரால்டு 175 மி.மீ, பந்தலூர் 181 மி.மீ, சேரங்கோடு179 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மின் விநியோகம் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் பாதிக்கப்பட்டு உள்ளது

ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை காற்று, மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் அனைத்துத் துறை அதிகாரிகளும் தயாராக இருக்க ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.