யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரோடு: இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு

ஈரோட்டில் இன்று இந்து முன்னனி சார்பாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

News image
ஈரோட்டில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு
Updated On :22 ஆகஸ்ட் 2020, 10:14 am

DIN

ஈரோட்டில் இன்று இந்து முன்னனி சார்பாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

ஈரோட்டை பொறுத்தவரை இந்து முன்னணி சார்பில் மாநகர் பகுதியில் 100 இடங்களிலும் மாவட்டம் முழுவதும் ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம்.

பின்னர் அந்த சிலையை ஊர்வலமாக எடுத்து நீர் நிலைகளில் கரைப்பார்கள். ஆனால் இந்த வருடம் கரோனா தொற்றின் தாக்கம் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவேளை உடனே சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என்று இந்து முன்னணி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று சம்பத் நகரில் இந்து முன்னணி நிர்வாகிக்கு சொந்தமான இடத்தில் வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

சிறிய அளவிலான விநாயகர் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் நிர்வாகிகள் வழிபட்டனர். மாவட்ட செயலாளர் வக்கீல் முரளி, பாரதிய ஜனதா கட்சியின் மாநில முன்னாள் பிரச்சார அணி தலைவர் சரவணன் உள்பட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதில் அனைவரும் சமூக இடைவெளி கடைப்பிடித்து வழிபட்டனர். காவால்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைப்போல் மாநகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட இடங்களிலும் , மாவட்டம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

ஈரோட்டில் விநாயகர் சிலைகளை பவானி ஆறு, காவிரி ஆறுகளில் கரைப்பது வழக்கம். இந்த வருடம் ஊர்வலமாக செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் தனித்தனியாக பவானி ஆறு, காவிரி ஆற்றில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு சிலர் இன்று மாலை முதல் நீர்நிலைகளில் சென்று சிலையை கரைக்கிறார்கள். வாய்க்கால்களில் பாசனத்திற்காக தண்ணீர் செல்வதால் பிளாக்குகளில் சிலைகளை கரைக்க கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. காலிங்கராயன் வாய்க்கால், கீழ்பவானி வாய்க்கால், தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் விநாயகர் சிலை கரைக்க அனுமதி இல்லை. ஈரோடு மாநகர் பகுதியில் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.