யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

செப் 9-ல் கூடும் மேற்கு வங்க சட்டப் பேரவை

மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டம் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் என்று சபைத் தலைவர் பிமான் பானர்ஜி புதன்கிழமை அறிவித்தார்.

News image
செப் 9-ல் கூடும் மேற்கு வங்க சட்டப் பேரவை (கோப்புப்படம்)
Updated On :26 ஆகஸ்ட் 2020, 9:02 am

PTI

மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டம் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் என்று சபைத் தலைவர் பிமான் பானர்ஜி புதன்கிழமை அறிவித்தார்.

சட்டபேரவைக் கூட்டத்தொடர் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும். அமர்வின் காலம் மற்றும் சபையின் வணிகம் குறித்த முடிவுகள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் என்று சபைத் தலைவர் பானர்ஜி அறிவித்தார்.

மேலும், கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி சட்டப்பேரவை அமர்வுகள் நடைபெறும் எனக் கூறினார்.

இதுகுறித்து திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில்,

இந்த வார தொடக்கத்தில், மாநில அரசு செப்டம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் சட்டப் பேரவைக் கூட்டத்தை கூட்ட சபைத் தலைவரிடம் தெரிவித்தோம்.

விதிமுறைகளின்படி, இரண்டு அமர்வுகளுக்கு இடையில் ஆறு மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்க முடியாது. மேற்கு வங்கத்தில், கடைசி அமர்வு இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்தது. எனவே செப்டம்பர் மாதத்திற்குள் அடுத்த அமர்வை நடத்த வேண்டும். பெரும்பாலும் இது ஒரு குறுகிய அமர்வாக இருக்கும் என கூறினார்.

மேற்கு வங்கத்தில் 295 உறுப்பினர்களைக் கொண்ட சட்டபேரவை உள்ளது. இதில் ஆங்கிலோ-இந்திய சமூகத்திலிருந்து பரிந்துரைக்கப்பட்ட ஒரு உறுப்பினரும் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.