தேர்ச்சி அறிவிப்பு: ஈரோட்டில் முதல்வருக்கு அரியர் மாணவர்கள் நன்றிப் பதாகை!
அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு ஈரோட்டில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.


ஈரோடு : அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு ஈரோட்டில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று இப்போது உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் ஊடுருவி தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்துது வருகிறது.
இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கும் என்பது தெரியவில்லை.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர அனைத்துப் பருவ தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாகவும், அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலம் பகுதியில் வாழ்த்து பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அந்த வாழ்த்துப் பதாகையில் அரியர் மாணவர்களின் அரசனே, எந்நன்றி கொன்றார்க்கு உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்ற திருக்குறளை எழுதி, ஐயா எடப்பாடியாரே நீர் வாழ்க, வாழ்க, இப்படிக்கு அரியர் மாணவர்கள் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த வாழ்த்து பதாகையை அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்து, நின்று வாசித்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...