கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘விவசாயிகளுக்கு எதிராக போராட அரசு தயாராகிவிட்டது’: சுக்பீர் சிங்

விவசாயிகளுக்கு எதிராக போராட மத்திய அரசு தயாராகிவிட்டது என சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கூறியுள்ளார்.

News image

சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல்

Updated On :10 டிசம்பர் 2020, 3:51 pm

ANI

விவசாயிகளுக்கு எதிராக போராட மத்திய அரசு தயாராகிவிட்டது என சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கூறியுள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தில்லியில் தொடர்ந்து 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல கட்டப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், டிசம்பர் 14ஆம் தேதி முதல் போராட்டத்தை தீவிரப் படுத்தப் போவதாக விவசாய  சங்கத்தினர்  அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசுகையில், விவசாயிகளின் நலனுக்காகவே புதிய வேளான் சட்டம் இயற்றப்பட்டுள்ளது எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சுக்பீர் சிங்,

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கூடாது என்ற மத்திய அரசின் நிலைபாட்டை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம். உணவு வழங்கும் விவசாயிகளுக்கு எதிராக அவர்கள் போராட முடிவு செய்துவிட்டார்கள் என்பது இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பு நிரூபிக்கிறது எனத் தெரிவித்தார்.

இதற்கு முன், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளம் விலகியதோடு, மத்திய அமைச்சர் பதவியையும் ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.