ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து நாகூரில் காத்திருப்புப் போராட்டம் தொடக்கம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி நாகூர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் நாகூரில் தொடர் காத்திருப்புப் போராட்டம்

News image
Updated On :28 பிப்ரவரி 2020, 4:42 pm

DIN


நாகப்பட்டினம்: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி நாகூர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் நாகூரில் தொடர் காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், இந்தச்  சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

நாகூர் சியா மரைக்காயர் தெருவில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8 மணி அளவில் போராட்டம் தொடங்கியது. நூற்றுக்கும் அதிகமான பெண்கள் உள்பட திரளானோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.