ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கண்டித்து கடையடைப்பு உண்ணாவிரதம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் பகுதியில் கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

News image

மாரியம்மன் கோயில் கடைத்தெருவில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 

Updated On :2 மார்ச் 2020, 6:02 am

DIN


தஞ்சாவூர்: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் பகுதியில் கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

வணிகர் சங்கம், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெறும் இப்போராட்டத்தையொட்டி, மாரியம்மன் கோயில் கடைத்தெருவில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 

மேலும் அதே பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் வணிகர்கள், திமுக, கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்தும்,  அவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இப்போராட்டம் மாலை வரை தொடரும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.