காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கரோனா தடுப்புப் பணி: வேலூர் திமுக எம்பி ரூ.ஒரு கோடி ஒதுக்கீடு: துரைமுருகன் ரூ.50 லட்சம் அளிப்பு

கரோனா தடுப்புப் பணிகளுக்காக வேலூர் திமுக எம்பி டி.எம்.கதிர்ஆனந்த், தனது மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

News image
Updated On :29 மார்ச் 2020, 4:48 am

DIN

வேலூர்: கரோனா தடுப்புப் பணிகளுக்காக வேலூர் திமுக எம்பி டி.எம்.கதிர்ஆனந்த், தனது மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதேபோல், முன்னாள் அமைச்சரும், காட்பாடி சட்டப்பேரவை உறுப்பினரான துரைமுருகன் தனது பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள பரிந்துரை கடிதத்தில், தமிழகத்தில் பரவிவரும் கரோனா நோய் தொற்று பாதிப்பிலிருந்து மக்களை காத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. மேலும், அதற்கு தேவையான மருத்துவக் கருவிகள், செயற்கை சுவாச கருவிகள், முகக்கவசம், கையுறை, கிருமி நாசினிகள் உள்ளிட்ட தேவையான பொருட்களை அரசு மருத்துவமனைகளுக்கு வாங்கிடும் வகையில் வேலூர் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.ஒரு கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்திட பரிந்துரைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், முன்னாள் அமைச்சரும், காட்பாடி சட்டப்பேரவை உறுப்பினருமான துரைமுருகன் தனது பேரவை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான பரிந்துரைக் கடிதத்தையும் அவர் ஆட்சியருக்கு அனுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.