தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

11 மாநில இடைத்தேர்தல்கள்: நாளை வாக்கு எண்ணிக்கை

நாடு முழுவதும் பல மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப் பேரவைகளில் நடத்தப்பட்ட  இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :9 நவம்பர் 2020, 10:01 am

DIN

நாடு முழுவதும் பல மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப் பேரவைகளில் நடத்தப்பட்ட  இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

சத்தீஸ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட், கர்நாடகம், நாகாலாந்து, ஒடிசா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய 10 மாநிலங்களில் காலியாக இருந்த 54 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3 ஆம் தேதியும், மணிப்பூரில் காலியாக இருந்த 2 தொகுதிகளுக்கு நவம்பர் 7 ஆம் தேதியும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதனிடையே பிகார் சட்டபேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது, மேலும் பிகாரில் காலியாக இருந்த ஒரு மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 7ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையானது நாளை (நவம்பர் 10) நடைபெற உள்ளது.

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.