ராகுல் அதிரடி சதம்: பெங்களூருக்கு 207 ரன்கள் இலக்கு
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.


கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இணைந்து வலுவான துவக்கம் கொடுத்தனர்.
பின் மயங்க் அகர்வால் 26 ரன்களில் ஆட்டமிழக்க, ராகுலுடன் இணைந்த நிகோலஸ் பூரன் 17 ரன்களில் அவுட்டானார்.
இதைத்தொடர்ந்து கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆடிய ராகுல் 69 பந்துகளில் 132 ரன்களும் கருண் 15 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
பெங்களூரு அணி சார்பில் சிவம் துபே அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்ததன் முலம் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 207 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...