காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் தில்லி அணி சென்னை அணியை 44 ரன்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

News image
வாட்சனை அவுட்டாக்கிய மகிழ்ச்சியில் தில்லி வீரர்கள்
Updated On :26 செப்டம்பர் 2020, 7:37 am

DIN

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் தில்லி அணி சென்னை அணியை 44 ரன்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

தில்லி அணியில் முதலில் களமிறங்கிய பிருத்வி ஷா, தவான் ஜோடி நிதாமான தொடக்கம் தந்தது. இந்நிலையில் பிருத்வி ஷா (64), தவான் (35) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின் களமிறங்கிய தில்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 26 ரன்களில் ஆட்டமிழக்க, ரிஷப் பந்த் (37) மற்றும் மார்கஸ் ஸ்டாய்னில் (5) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் தில்லி அணி 175 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இதன்மூலம் சென்னை அணியின் வெற்றிக்கு 176 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய் (10), வாட்சன் (14) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின் களமிறங்கிய டூ பிளசிஸ் சற்று நிதானமாக விளையாடினார். இந்நிலையில் ருத்துராஜ் 5 ரன்னில் ரன் அவுட்டானார். சற்று அதிரடியாக ஆடிய ஜாதவ் 26 ரன்னில் வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து டூபிளசிஸுடன் இணைந்த தோனி அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர்.
சற்று நிலைத்து ஆடிய பிளசிஸ் 43 ரன்களிலும் தோனி 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.  இறுதி பந்தில் ஜடேஜா 12 ரன்களில் ஆட்டமிழக்க, சாம் (1) ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம் சென்னை அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி அணி வீழ்த்தியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.