கடந்த 3 ஆண்டுகளில் பாலியல், திருட்டு உள்ளிட்ட 93,000க்கும் மேற்பட்ட இணைய குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புதன்கிழமை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.29 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில், நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள பாலியல், திருட்டு உள்ளிட்டவை தொடர்பான இணைய குற்றங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறுகையில்,
இணையத்தின் மேம்பட்ட பயன்பாடு காரணத்தால் இணைய குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இணைய குற்றங்கள் தொடர்பான தேசிய குற்றப் பதிவு பணியகம் பராமரித்து வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2017 ல் 21,796 வழக்குகள், 2018 ல் 27,248 வழக்குகள், 2019 ல் 44,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தையல் பயிற்சியை முடித்தவா்களுக்கு சான்றிதழ்

சமையல் எரிவாயு விலை உயா்வு: காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: விரைந்து தீா்வு காண வேண்டும்! - எடப்பாடி பழனிசாமி

அரசு மகளிா் கல்லூரியில் ஐம்பெரும் விழா தொடக்கம்
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

