இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மூன்று ஆண்டுகளில் 93,000 இணைய குற்றங்கள்: மத்திய அமைச்சர்

கடந்த 3 ஆண்டுகளில் பாலியல், திருட்டு உள்ளிட்ட 93,000க்கும் மேற்பட்ட இணைய குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புதன்கிழமை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

News image
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி
Updated On :3 பிப்ரவரி 2021, 10:09 am

DIN

கடந்த 3 ஆண்டுகளில் பாலியல், திருட்டு உள்ளிட்ட 93,000க்கும் மேற்பட்ட இணைய குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புதன்கிழமை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.29 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில், நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள பாலியல், திருட்டு உள்ளிட்டவை தொடர்பான இணைய குற்றங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறுகையில்,

இணையத்தின் மேம்பட்ட பயன்பாடு காரணத்தால் இணைய குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இணைய குற்றங்கள் தொடர்பான தேசிய குற்றப் பதிவு பணியகம் பராமரித்து வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2017 ல் 21,796 வழக்குகள், 2018 ல் 27,248 வழக்குகள், 2019 ல் 44,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.