நெல்லை அருகே தலை துண்டித்து இளைஞர் கொலை
திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்தில் தலை துண்டித்து இளைஞர் திங்கள்கிழமை கொலை செய்யப்பட்டார்.


திருநெல்வேலி: திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்தில் தலை துண்டித்து இளைஞர் திங்கள்கிழமை கொலை செய்யப்பட்டார்.
தாழையூத்து பூலித்தேவர் நகரைச் சேர்ந்த பரமசிவன் மகன் கோழி என்ற சிதம்பரசெல்வன் (22). கூலித் தொழிலாளி. இவர், அடிக்கடி மது அருந்திவிட்டு அதே பகுதியில் உள்ள உறவினர்களின் வீடு முன்பு சென்று தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
இந்நிலையில் திங்கள்கிழமை அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் மதுஅருந்த சென்றாராம். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் சிதம்பரசெல்வத்தை அரிவாளால் வெட்டிக்கொலை செய்ததோடு, தலையையும் துண்டித்து அப்பகுதியிலேயே போட்டுவிட்டு தப்பினர்.
தகவலறிந்ததும் தாழையூத்து காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை தலைமையில் காவலர்கள் அங்கு சென்றனர். தாழையூத்தி டிஎஸ்பி அர்ச்சனா நேரில் சென்று விசாரணை நடத்தினார். சிதம்பரசெல்வத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிந்து அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன்கள் பாலாஜி (39), ராமையா (37), சங்கரபாண்டி (40) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக சுப்பையா, பால்துரை உள்பட மேலும் 3 பேரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...