இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கரோனாவால் முன்னாள் அமைச்சர் தாமோதரன் காலமானார்

கோவையில் தனியார் மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ப.வெ.தாமோதரன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 

News image
தமிழக முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் ப.வே.தாமோதரன்
Updated On :12 ஜனவரி 2021, 2:19 pm

DIN

கோவை: கோவையில் தனியார் மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ப.வெ.தாமோதரன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை அருகேயுள்ள பச்சார்பாளையத்தை சேர்ந்தவர் ப.வெ.தாமோதரன்(76). ஜெயலலிதா அமைச்சரவையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். முன்னாள் கோவை புறநகர் மாவட்ட செயலாளர், எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் மாநில துணைத் தலைவர், ஆவின் முன்னாள் தலைவர் ஆகிய பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். 

இந்நிலையில் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி உடல்நலக் குறைவால் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. நுரையீரலில் 90 சதவீதம் பாதிப்புகள் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இதனிடையே ஜனவரி முதல் வாரத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் கரோனாவுக்கு பின் கவனிப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திரும்பவும் உடல்நிலை மோசமானதால் மீண்டும் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நோய்த் தொற்றின் தீவிரத்தாலும், நுரையீரல் பாதிப்பாலும் செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.