ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

போகி: வேளாண் சட்ட நகல்களை எரித்து விவசாயிகள் கொண்டாட்டம்

போகிப் பண்டிகையை முன்னிட்டு தில்லியில் போராடும் விவசாயிகள் மத்திய வேளாண் சட்ட நகல்களை எரித்து கொண்டாடினார்கள்.

News image

வேளாண் சட்ட நகல்களை எரித்து விவசாயிகள் கொண்டாட்டம்

Updated On :13 ஜனவரி 2021, 1:23 pm

ANI

போகிப் பண்டிகையை முன்னிட்டு தில்லியில் போராடும் விவசாயிகள் மத்திய வேளாண் சட்ட நகல்களை எரித்து கொண்டாடினார்கள்.

மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்பாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் கடந்த 50 நாள்களாக தொடர்ந்து தில்லியில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், போகிப் பண்டிகையை முன்னிட்டு வேளாண் சட்ட நகல்களை தில்லி, ஹரியாணா எல்லைகளில் போராடி வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் எரித்துக் கொண்டாடினார்கள்.

Story image

ஜந்தர் - மந்தரில் போராடி வரும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேளாண் சட்ட நகல்களை எரித்தனர்.

உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில், வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டு, விவசாயிகளுடன் பேச குழு அமைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.