குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் ரஃபேல் போர் விமானம்

தில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் பங்கேற்கும் என்று இந்திய விமானப் படையின் செய்தித் தொடர்பாளர் விங் கமாண்டர் இந்திரனில் நந்தி தெரிவித்துள்ளார்.
ரஃபேல் போர் விமானம்
ரஃபேல் போர் விமானம்
Published on
Updated on
1 min read

தில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் பங்கேற்கும் என்று இந்திய விமானப் படையின் செய்தித் தொடர்பாளர் விங் கமாண்டர் இந்திரனில் நந்தி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ரூ. 60,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் விமானங்களுக்கு கடந்த 2016இல் பிரான்ஸிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதையடுத்து தற்போது வரை 8 ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் தில்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், நிகழ்வாண்டு ரஃபேல் போர் விமானமும் பங்கேற்கும் என்று இந்திய விமானப் படையின் செய்தித் தொடர்பாளர் விங் கமாண்டர் இந்திரனில் நந்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com