திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

குஜராத்தில் 2 ஆண்டுகளில் 313 சிங்கங்கள் பலி

குஜராத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 313 சிங்கங்கள் பலியாகியுள்ளதாக மாநில சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

News image

குஜராத்தில் 2 ஆண்டில் 313 சிங்கங்கள் பலி

Updated On :5 மார்ச் 2021, 11:44 am

குஜராத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 313 சிங்கங்கள் பலியாகியுள்ளதாக மாநில சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

ஜுனாகர் மாவட்டத்தின் கிர் தேசிய பூங்கா ஆசிய சிங்கங்களின் இருப்பிடமாக உள்ளது.

இந்நிலையில் லாதி தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த வனத்துறை அமைச்சர் கண்பத்சிங் வாசவா தெரிவித்ததாவது,

2019 ஜனவரி முதல் 2020 டிசம்பர் வரையிலான இரண்டு ஆண்டுகளில் குஜராத்தில் மொத்தம் 313 சிங்கங்கள் பலியாகியுள்ளது.

அவற்றில், 69 ஆண் சிங்கங்கள் இயற்கையாகவும், இரண்டு இயற்கைக்கு மாறாகவும், 77 பெண் சிங்கங்கள் இயற்கை இயற்கையாகவும், 13 இயற்கைக்கு மாறாகவும் பலியாகியுள்ளது.

மேலும், 144 சிங்க குட்டிகள் இயற்கையாகவும், 8 இயற்கைக்கு மாறாகவும் பலியாகியுள்ளதாக தெரிவித்தார்.

சிங்கங்களின் கணக்கெடுப்பு 2020இன் படி, குஜராத்தில் 674 ஆசிய சிங்கங்கள் உள்ளது. இது 2015 கணக்கெடுப்பை ஒப்பிடும்போது 29 சதவீதம் அதிகமாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.