தமிழ்நாட்டில் கரோனா அதிகரிப்பு: மத்திய அரசு கடிதம்

கரோனா தொற்று அதிகரிப்பு தொடர்பாக தமிழ்நாடு, தில்லி, உத்தரப்பிரதேசம், ஹரியாணா, கர்நாடகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read

கரோனா தொற்று அதிகரிப்பு தொடர்பாக தமிழ்நாடு, தில்லி, உத்தரப்பிரதேசம், ஹரியாணா, கர்நாடகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. 

அதில், கரோனா பரிசோதனையை இன்னும் அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த வாரம் 4.7%ஆக இருந்த தினசரி பாதிப்பு, நடப்பு வாரத்தில் 5.5%ஆக அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் 500க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாடு சுகாதாரத் துறையினா் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com