மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பர்சனல் லோன் வாங்குவதற்கும் சிக்கல்.. ஆர்பிஐ கொண்டுவந்த விதிமுறை

பர்சனல் லோன் வாங்குவதற்கும் சிக்கல் ஏற்படுத்தும் சில விதிமுறைகளை ஆர்பிஐ கொண்டுவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

News image
ஆர்பிஐ விதிமுறை
Updated On :4 ஏப்ரல் 2025, 8:00 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஏற்கனவே, ஏழைகள் மட்டுமே அதிகம் பெறும் நகைக் கடனுக்கு புதிய விதி என்ற பெயரில் ஆர்பிஐ ஆப்பு வைத்துவிட்ட நிலையில், அடுத்து தனிநபர் கடன் எனப்படும் பர்சனல் லோன் வாங்குவதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனை சிக்கல் என்றும் சொல்லலாம், பர்சனல் லோன் எடுத்து சிக்காமல் தப்பிப்பதற்கான வழி என்றும் சொல்லலாம்.

அதாவது, ஆர்பிஐ கொண்டு வந்திருக்கும் விதிமுறையின்படி, நிதி நிறுவனங்கள், ஒரு தனி நபரின் நிதி நிலையை அறியும் சிபில் ஸ்கோரை ஒரு மாதத்துக்கு ஒரு முறை அல்லாமல், 15 நாள்களுக்கு ஒரு முறை அப்டேட் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதனால் என்னவாகும்?

ஒருவர் மாதத் தொடக்கத்தில் சிபில் ஸ்கோர் வைத்து கடன் வாங்கிவிட்டு, அடுத்த ஒரு சில வாரத்திலேயே, அதே சிபில் ஸ்கோருடன் மற்றொரு பர்சனல் லோன் வாங்குவதை இந்த முறை தடை செய்கிறது.

அது மட்டுமல்ல, ஒரு மாதத்தின் தொடக்கத்தில் சிபில் ஸ்கோர் எடுக்கப்படுகிறது. அடுத்து 30 நாள்களுக்குப் பிறகுதான் சிபில் ஸ்கோர் எடுக்கப்படும் என்றால், அந்த 30 நாள்களுக்குள் ஒருவர் இஎம்ஐ எனப்படும் மாதத் தவணையை செலுத்தத் தவறியிருந்தால், அடுத்த சிபில் ஸ்கோர் வருவதற்குள் மற்றொரு கடனைப் பெற்றுவிடுவதற்கும் வாய்ப்பு உருவாகிவிடும்.

ஒருவர் மாதத் தவணையை கட்டத் தவறிவிட்டார் என்பது சிபில் ஸ்கோரில் பதிவாக 40 நாள்கள் ஆகும். எனவே, அதற்குள் அவர் கடன்களைப் பெற்றுவிடாமல் தடுக்கும் வகையில் 15 நாள்களுக்கு ஒரு முறை சிபில் ஸ்கோர் அப்டேட் செய்யப்பட வேண்டும், அதைக்கொண்டே கடன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, வங்கியில் தொழில்நுட்பக் கோளாறு போன்றவற்றால் தவணை செலுத்துவதில் பிரச்னை ஏற்பட்டு சிபில் ஸ்கோரில் எதிரொலித்தாலும் பிரச்னைதான்.

ஒரே நேரத்தில் இரண்டு கடன்களையும் இதனால் பெற இயலாது. ஒருவர், தன்னால் திருப்பி செலுத்தும் தகுதியுடைய தொகையைக் காட்டிலும் அதிகக் கடனை வாங்கிவிடும் அபாயமும் இதனால் தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே கடன் தவணை திருப்பிச் செலுத்தப்படாமல் விட்டதை மறைத்து ஒருவர் புதிய கடனை பெற்றுக் கொள்வதிலிருந்தும், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பர்சனல் லோன்களைப் பெறுவதிலிருந்தும் தடுத்து, நிதி நிறுவனங்களைக் காப்பாற்ற உதவுகிறது.

அது மட்டுமல்லாமல், சில நிதி நிறுவனங்கள், மாதத் தவணையை தன்னிச்சியைக மாற்றியமைப்பது, தவணைக் காலத்தை திருத்துவது போன்றவற்றில் ஈடுபடாமல் தடுக்கும் விதிமுறையும் உருவாக்கப்பட்டுள்ளது. கடன் பெற்றவரின் ஒப்புதலைப் பெற்றே, இந்த மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும், இடையில், இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேஎஃப்எஸ் பற்றி தெரியுமா?

கேஒய்சி என்பது கோல, கடன் வழங்கும் நிதி நிறுவனம் வழங்கும் முழு விவர ஆவணம்தான் கேஎஃப்எஸ். அந்த கேஎஃப்எஸ் ஆவணத்தை, கடன் வாங்கும் ஒவ்வொருவரும் நிச்சயமாக பெற்று முழுமையாகப் படித்த பிறகே கடன் பெற ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இந்த கேஎஃப்எஸ் கடன் பெறும் தாகை, வட்டி விகிதம், திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசம், கட்டண விவரங்கள், திரும்ப செலுத்தும் தொகை என அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்த கேஎஃப்எஸ் ஆவணமானது வெளிப்படைத்தன்மையுடன் உருவாக்கப்பட்டிருந்தால் கடன் பெறுபவருக்கு மிகுந்த நன்மையளிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.