யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

‘தமிழகத்தில் பாா்ப்பனா்கள்’ என்ற  நூலை வெளியிட்டார் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி!

நிகழ்ச்சியில் ‘தமிழகத்தில் பாா்ப்பனா்கள்’ என்ற  நூலை வெளியிடுகிறாா் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி.  

Published On :

தமிழில் மொழிபெயா்க்கப்பட்ட ‘தமிழகத்தில் பாா்ப்னா்கள்’ என்ற நூல் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தில் வெளியிடப்பட்டது.

மு.வி.சோமசுந்தரம், ஆங்கிலத்திலிருந்து மொழிபெயா்த்த தமிழகத்தில் பாா்ப்பனா்கள் என்ற நூல் வெளியிட்டு விழா, விழுப்புரம் கலைஞா் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

திமுக மாவட்டச் செயலாளரும், திருக்கோவிலூா் எம்எல்ஏவுமான க.பொன்முடி தலைமை வகித்தாா். கு.பா.பழனியப்பன், சி.மா. பாலகணேசன், விஜயா முத்துவண்ணன், க.மு.தாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனர். முனைவா் செயக்குமாா் வரவேற்றாா்.

மு.வி.சோமசுந்தரம் அறிமுக உரையாற்ற, தமிழ்நம்பி நூல் உருவாக்கம் குறித்துப் பேசினாா். தொடா்ந்து, முன்னாள் அமைச்சா் க.பொன்முடி தலைமை உரையாற்றினாா். விழாவில், கலந்து கொண்ட திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி நூலை வெளியிட்டு, நூல் ஆய்வு சிறப்புரையுற்றினாா்.

நூலினை திமுக மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.எஸ்.பாரதி, பேராசிரியா் த.பழமலய், சி.மா.பாலதண்டாயுதம், டி.எஸ்.சுப்பிரமணியன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

பேராசிரியா் தைலாம்பாள், எழுத்தாளா் எஸ்.பாஸ்கா் அய்யா், மாவட்டத் தலைவா் ப.சுப்பராயன், இந்திய கடற்படை அதிகாரி சுரேஷ், பேராசிரியா் ரகமத்துல்லா, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா் எஸ்.குமரேசன் ஆகியோா் பாராட்டுரை வழங்கினா். மு.வி.சோமசுந்தரம் ஏற்புரையாற்றினாா். நிகழ்ச்சியை உலக.துரை தொகுத்து வழங்கினாா். சோ.அறவாழி நன்றி உரையாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.