மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஸ்கூப் நியூஸ்களைப் பெற நிருபர்கள் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுவது சகஜம்: அமெரிக்கப் பத்திரிகையாளரின் சர்ச்சை கருத்து!

அத்திரைப்படத்தில் முன்னாள் அட்லாண்டா ஜர்னல் கான்ஸ்டிட்டியூஷன் நிருபரான கேத்தி, ஸ்கூப் நியூஸ்களைப் பெறுவதற்காக பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்டார் என சித்தரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்

News image
American Journalist
Updated On :13 டிசம்பர் 2019, 5:55 am

RKV


ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளரான ஜெஸ்ஸி வாட்டர்ஸ், சக பெண் நிருபர்களைப் பற்றி பகிர்ந்து கொண்ட செய்தி ஒன்று தற்போது கடும் சர்ச்சைக்கும், விவாதத்திற்கும் உள்ளாகி இருக்கிறது.  அவர் புதன் அன்று கலந்து கொண்ட ஃபாக்ஸ் நியூஸ் டாக் ஷோக்களில் ஒன்றான ‘தி ஃபைவ்’ நிகழ்ச்சியில் இத்தகவலைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதிலிருந்து, இது ஒன்றும் புதிதல்ல, ஹாலிவுட்டிலும், பத்திரிகையாளர்களின் நிஜ வாழ்க்கையிலும் அடிக்கடி நிகழக்கூடிய ஒன்று தான் எனக் கூறியிருந்தார். 

‘அலி வாட்கின்ஸ் எனும் பெண், பல ஆண்டுகளாக பிரபல பத்திரிகைகள் பலவற்றில் பணிபுரிந்திருந்து பத்திரிகைத் துறையில் மிகுந்த அனுபவம் மிக்க பத்திரிகையாளராகத் திகழ்ந்து வந்தவர். ஆனால், அவரே, தனக்கான ஸ்கூப் செய்திகளைப் பெற செய்திகளை உடனுக்குடன் பெற்றுத்தரக்கூடிய சோர்ஸ்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டதால் தான் அவரால் அத்தனை ஸ்கூப் செய்திகளை உருவாக்க முடிந்தது, இது இங்கே பரவலாக நடக்கக் கூடியது தான்’

- என்று ஜெஸ்ஸி வாட்டர்ஸ் தெரிவித்திருந்தார். 

பெண் நிருபர்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்ட இத்தகைய கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, தன்னுடைய துறை சார்ந்த பெண்களை ஜெஸ்ஸி வாட்டர்ஸ் இப்படி இழிவு படுத்தியிருக்க வேண்டியதில்லை. அப்படி இழிவு படுத்தும் எண்ணத்துடன் இருப்பவர்களையும், இயங்குபவர்களை ஜெஸ்ஸி கண்டித்திருக்க வேண்டுமே தவிர இவ்விதமாக அருவருக்கத்தக்க கருத்துக்களைப் பதிவு செய்திருக்கக் கூடாது. என்ன சி என் என் செய்தியாளரான கப் தனது ட்விட்டர் தளத்தில் ஜெஸ்ஸிக்கு எதிராகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். 

ஜெஸ்ஸி வாட்டர்ஸ் திடீரென ஏன் இப்படியொரு கருத்தை வெளியிட்டார்?

கிளிண்ட் ஈஸ்ட்வுட்ஸின் வெளிவரவிருக்கும் திரைப்படமான  ‘ரிச்சர்ட் ஜுவல்’ எனும் திரைப்படத்தில் பெண் பத்திரிகையாளராக கேத்தி ஸ்க்ருக்ஸ் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து சில வாரங்களாகக் கடுமையான விவாதங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. அத்திரைப்படத்தில் முன்னாள் அட்லாண்டா ஜர்னல் கான்ஸ்டிட்டியூஷன் நிருபரான கேத்தி, ஸ்கூப் நியூஸ்களைப் பெறுவதற்காக பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்டார் என சித்தரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்

அத்தகவல் குறித்து ஜெஸ்ஸி வாட்டர்ஸ் கலந்து கொண்ட ரியாலிட்டி ஷோவில் கேள்விகள் முன் வைக்கப்பட்ட போது தான் மேற்கண்ட கருத்தைப் பகிர்ந்து தற்போது சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார் பத்திரிகையாளர் ஜெஸ்ஸி வாட்டர்ஸ்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.