45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

முதல் செயற்கோளை விண்ணில் நிலைநிறுத்தியது ஈரான் ராணுவம்

ஈரான் நாட்டின் முதல் ராணுவ செயற்கைக்கோளை விண்வெளிச் சுற்றுப்பாதையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை புதன்கிழமை நிலைநிறுத்தியுள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2020, 9:49 am

DIN

தெஹரான்: ஈரான் நாட்டின் முதல் ராணுவ செயற்கைக்கோளை விண்வெளிச் சுற்றுப்பாதையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை புதன்கிழமை நிலைநிறுத்தியுள்ளது.

நூர் செயற்கைக்கோள் எனப்படும் ஈரானின் இந்த ராணுவ செயற்கைக்கோள், இரண்டடுக்கு காசெத் கலம் மூலம் ஏவப்பட்டு, 425 கி.மீ. தொலைவிலுள்ள சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக காவல்படை (ராணுவம்) தெரிவித்துள்ளதாக ஈரான் அரசு செய்தி நிறுவனமான இஸ்லாமியக் குடியரசு செய்தி நிறுவனம் (இர்னா) தெரிவித்துள்ளது.

ஈரானைப் பொருத்தவரையில் விண்வெளியில் இது புதிய முன்னேற்றம் என்றும் இர்னா குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில் இந்தச் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.