ஜம்மு-காஷ்மீரில் ஆக.5 வரை ஊரடங்கு நீட்டிப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன


ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஜம்மு-காஷ்மீரில் ஜூலை 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில், ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில்கரோனா வைரஸ் பரவல் குறையாததால், ஊரடங்கு நீடிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 20,972 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்த நிலையில், 613 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக மத்திய குடும்பநலத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...