கேரளத்தில் தங்கம் கடத்தல் வழக்கு: கே.டி.ரமீஸிற்கு ஆக.7 வரை என்.ஐ.ஏ. காவல்
கேரளத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் கைதான கே.டி. ரமீஸின் என்.ஐ.ஏ. காவல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


கொச்சி: கேரளத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் கைதான கே.டி. ரமீஸின் என்.ஐ.ஏ. காவல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கடந்த ஜூலை 12-ஆம் தேதி கே.டி.ரமீஸ் என்பவர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட கே.டி.ரமீஸிற்கு ஜூலை 28-ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு என்.ஐ.ஏ. காவல் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றுடன் (செவ்வாய்க் கிழமை) அவரது என்.ஐ.ஏ காவல் நிறைவு பெற்றதை தொடர்ந்து கொச்சியில் உள்ள சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது கே.டி.ரமீஸிற்கு ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோருக்கு ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...