சின்னமனூரில் தேசிய புலனாய்வு முகமை போலீசார் விசாரணை

தேனி மாவட்டம் சின்னமனூரில் தேசிய புலனாய்வு முகமை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னமனூர்
சின்னமனூர்



உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூரில் தேசிய புலனாய்வு முகமை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரையைச் சேர்ந்த ஒருவர் மதம் மாறி சின்னமனூரில் பிரியாணி மற்றும் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் தடைசெய்யப்பட்ட அல்-உம்மா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

அதன்படி சனிக்கிழமை காலை 5 மணியளவில் இருந்து சின்னமனூர் தேரடி பகுதியில் உள்ள அவரது கடையை மற்றும் சில பகுதிகளில் தேசிய புலனாய்வு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com