தமிழ்நாட்டில் 2 ஏடிஜிபிக்களுக்கு கூடுதல் பொறுப்புகளை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் திரிபாதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக காவல்துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
காவல்துறை பயிற்சி அகாடமி ஏடிஜிபி பிரதீப் வி.பிலிப்புக்கு காவலர் பயிற்சிக் கல்லூரி டிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு ஏடிஜிபி ஆபாஷ் குமாருக்கு பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் குளச்சல் ஏஎஸ்பி விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி ராஜ்பவன் முகாம் அலுவலகத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது