மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அறிவியல் தமிழறிஞர் இராம. சுந்தரம் காலமானார்

அறிவியல் தமிழறிஞர் இராம. சுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக தஞ்சாவூரில்  திங்கள்கிழமை காலை காலமானார்.

News image
இராம. சுந்தரம்
Updated On :8 மார்ச் 2021, 9:09 am

DIN


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகத் தலைவரும், அறிவியல் தமிழறிஞருமான இராம. சுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக தஞ்சாவூரில் அவரது இல்லத்தில்  திங்கள்கிழமை காலை காலமானார்.

ராமநாதபுரம் மாவட்டம், அலவாக்கோட்டையில் 1938, ஏப். 1 ஆம் தேதி பிறந்த இவர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

பின்னர், 1981 ஆம் ஆண்டு முதல் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சி இயக்குநராகவும், 1987 முதல் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைப் பேராசிரியராகவும், 1997 முதல் முதுநிலைப் பேராசிரியராகவும் பணியாற்றி 1998 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

இவர் நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்திய அகாதெமி, தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் இதர பல்கலைக்கழகங்களிலும் 10-க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். மேலும், பதிப்பாசிரியராக இருந்து 35-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். பல்வேறு அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

எஸ். வையாபுரிப் பிள்ளையின் ஆய்வுகளை முன்னெடுத்தவர் இராம. சுந்தரம். தாமஸ் டிரவுட்மென் எழுதிய திராவிடச் சான்று நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தமிழ் மார்க்சிய ஆய்வுகளில் பேராசிரியர் நா.வானமாமலை, க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோரின் வழியில் செயல்பட்டவர். பல ஆய்வாளர்களை உருவாக்கியுள்ளார்.

இவரிடம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொறியியல், மருத்துவப் படிப்புகளைத் தமிழில் கற்பிக்கும் பொறுப்பை முதல் துணைவேந்தர் வ.அய் சுப்பிரமணியம் வழங்கினார். பொறியியல், மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான பாட நூல்களைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டார். தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் களஞ்சியத்திலும் இராம. சுந்தரம் பணியாற்றினார்.

இவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 9) காலை 10 மணியளவில் தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் நடைபெறும்.

தொடர்பு எண் - 98432 72312, 9962030010.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.