தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் தமது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வியைத் தழுவியது. பாஜக போட்டியிட்ட 20 தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அமித் ஷா சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது, 5 ஆண்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களுக்கு முழுமனதோடு சேவை ஆற்றியுள்ளது.
மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதோடு பிரதமர்
நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழக சகோதர சகோதரிகளுக்கு உறுதி அளிக்கின்றேன் என்று கூறினார்.