திண்டுக்கல் அருகே பாலியல் புகாரில் சிக்கிய தனியாா் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு 3 நாள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் விசாரிக்க மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திண்டுக்கல் அருகே தனியாா் செவிலியா் பயிற்சி கல்லூரியின் தாளாளா் பி.ஜோதிமுருகன் அக்கல்லூரியின் மாணவிகள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாணவிகள் புகார் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக அந்த கல்லூரிக்கு மாவட்ட நிா்வாகம் கடந்த சனிக்கிழமை சீல் வைத்தது.
இதையும் படிக்க | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஈரோட்டில் அதிமுக விருப்பமனு தாக்கல்
மேலும் தாளாளர் ஜோதிமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனா். இதனிடையே தலைமறைவாக இருந்த ஜோதிமுருகன், திருவண்ணாமலை மாவட்டம் போளூா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.
இந்நிலையில் திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் இதுகுறித்து நடைபெற்ற விசாரணையின்போது கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகனை 3 நாள்கள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


